Loading...
Tuesday, 24 May 2016

சுவையான முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்

உங்கள் வீட்டில் கத்திரிக்காய், முருங்கைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சாம்பார் வைக்காமல், சற்று வித்தியாசமாக பொரியல் செய்து சுவைத்துப் பாருங்கள்.

அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.

சரி, இப்போது அந்த முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியலை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் - 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

காய்கள் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, மிளகாய் தூள் தூவி பிரட்டி, பச்சை வாசனை போனதும் இறக்கினால், முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் ரெடி!!!

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP