தேவையான பொருட்கள்
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
அரைத்த பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், கசகசா சேர்த்து, 3 நிமிடம் வறுக்கவும்.
* அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காயை போட்டு நன்றாக வறுக்கவும்.
* வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சியில் போட்டு அதனுடன் ப.மிளகாயை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 4 நிமிடம் வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் அரைத்த தேங்காய் மசாலா கலவையை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* மசாலா பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...