Loading...
Sunday, 28 February 2016

காரசாரமான இறால் மசாலா செய்வது எப்படி ...!!

காரசாரமான இறால் மசாலா

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

இறால் – 250 கிராம்

பட்டை – 1 துண்டு

சோம்பு – 1 டீஸ்பூன்

ஏலக்காய் – 2

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிது

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 1/2 கப் ஊற வைப்பதற்கு…

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 5-7 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் உள்ள எண்ணெயில் பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் இறால் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், காரசாரமான இறால் மசாலா ரெடி!!!

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP