Loading...
Thursday, 31 March 2016

வெயிலுக்கு இதமான சத்தான சிறு தானியக் கஞ்சி...!!

தேவையான பொருட்கள்: 

சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா – 50 கிராம், 
மோர் – 3 கப், 
தண்ணீர் – 4 கப், 
சின்ன வெங்காயம் – 8, 
சீரகம் – 1 டீஸ்பூன், 
கறிவேப்பிலை – தேவையான அளவு, 
பச்சைமிளகாய் – 3, 
கடுகு – 1 டீஸ்பூன், 
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், 
கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப் பொடிக்க வேண்டும். 

* இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும். 

* கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும். 

* பிறகு மோர், கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

* உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம். 

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP