கோடையில் மாங்காய் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாங்காயை துண்டுகளாக்கி உப்பு போட்டு பிரட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி வத்தல் போன்று செய்து, அதனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள்
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
மாங்கா வத்தல் - 10 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிட வதக்கவும்.
பிறகு அத்துடன் கத்திரிக்காய், மாங்கா வத்தல் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து 1 நிமிடம் பிரட்டி, தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அரிசி மாவை நீரில் கலந்து குழம்பில் ஊற்றி கிளறி 5 நிமிடம் பச்சை வாசனைப் போக கொதிக்க வைத்து இறக்கினால், மாங்காய் வத்தல் குழம்பு ரெடி!!!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...