தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
ப. மிளகாய் – 1
வெங்காயத் தாள் – 2
சில்லி கார்லிக் சாஸ் – 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 11/2 தேக்கரண்டி
நீர் – 5 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
அஜினமோட்டோ – 1/4 தேக்கரண்டி
வெள்ளை மிளகு – 1/4 தேக்கரண்டி
நூடுல்ஸ் செய்ய :
நூடுல்ஸ் (எக் நூடுல்ஸ்) – 85 கிராம்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சிக்கனை பதப்படுத்த :
சிக்கன் – 100 கிராம்
முட்டை வௌ்ளைக் கரு – 1
உப்பு – தேவையான அளவு
வெள்ளை மிளகு – 1/4 தேக்கரண்டி
சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி
செய்முறை :
* முதலில் விருப்பமான காய்கறிகளை வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
* நூடுல்ஸை சூடான நீரில் 2 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி எடுத்து விட்டு பின்பு அதனை குளிர்ந்த நீரில் போட்டு அலசி பின்பு வடிகட்டி அதில் சிறிது நல்லெண்ணெய் தெளித்து நன்றாக கலந்து வைக்கவும்
* ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் முட்டையின் வெள்ளைக் கரு, சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அதனுடன் உப்பு, மிளகு தூள் மற்றும் சிக்கன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சிக்கனை போட்டு பொன்னிறமாக வேக வைத்து பின்பு அதனை எடுத்து தனியே வைக்கவும்.
* பிறகு அதே பாத்திரத்தில் பச்சை மிளகாயை தவிர மீதமுள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு சிறிது வெங்காயத் தாள் சேர்க்கவும். தீயை அதிகரித்து 2 நிமிடம் வதக்கவும்
* பின்பு சிம்மில் வைத்து விட்டு அதனுடன் சில்லி கார்லிக் சாஸ், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து நன்றாக கிளறி 30 வினாடிகள் வேக வைக்கவும்.
* பின்பு அதனுடன் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறி 3 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
* கடைசியாக அதனுடன் மிளகு தூள், வெங்காயத் தாள் சேர்த்து நன்கு கிளறி 30 வினாடிகள் வைத்திருந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
* சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...