தேவையானவை:
பெரிய நண்டு -1
மிளகு - 2 டீஸ்பூன்(பொடியா
க்கியது)
சீரகத்தூள் -அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
லவங்கம் -1
கறிவேப்பிலை -சிறிதளவு
இஞ்சி -சிறுதுண்டு(விழுதாக்கிக்
கொள்ளவும்)
எண்ணெய் -1 டீஸ்பூன்
பிரியாணி இலை -1
எலுமிச்சம்பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை :
1.பொடியாக்கிய மிளகை சீரகத்தூளுடன் சேர்க்கவும் இதனுடன் இஞ்சி விழுதையும் சேர்க்கவும். இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சுத்தம் செய்த நண்டில் தடவி, அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லவங்கம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மசால் தடவிய நண்டை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதன் பிறகு எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...