தேவையான பொருட்கள் :
கடலை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
தயிர் - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து மிக்சியில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, உப்பு, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், ஓமம், சீரகம், கரம்மசாலா தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
* இந்த மாவுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து அரை மணிநேரம் ஊற விடவும்.
* பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த மாவை போட்டு பூரியை பொரித்து எடுக்கவும்.
* சுவையான உருளைக்கிழங்கு மசாலா பூரி தயார்.
* இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...