பாகற்காய் சிப்ஸ் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய பாகற்காய் - 250 கிராம்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
நசுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு - 5 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
* பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும்.
* வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
* பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது).
* வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும்.
* கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...