தேவையானப்பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
கேரட் (நடுத்தர அளவு) - 2
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
செய்முறை:
கேரட்டை கழுவி, தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது நீர் சேர்த்து வேக விட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு, அதில் கோதுமை மாவை போட்டு, மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அத்துடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்து கை விடாமல் கிளறவும். சர்க்கரை நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியாக பந்து போல் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவைப்பட்டால், மேலும் சிறிது நெய்யையும் ஊற்றிக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ கொட்டிப் பரப்பி விடவும். முந்திரியை சிறிய துண்டுகளாக்கி, அல்வாவின் மேல் தூவி விடவும்.
கவனிக்க: இனிப்பு அதிகம் தேவையென்றால், சர்க்கரையின் அளவை சிறிது கூட்டிக் கொள்ளவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...