என்னென்ன தேவை?
தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு,
துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்,
வெள்ளைப் பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்),
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.
எப்படிச் செய்வது?
தூதுவளையை துண்டுகளாக வெட்டி, மசித்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்புச் சேர்க்கவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, பூண்டு நசுக்கிப் போடவும்.
மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போடவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடித்ததும், சீரகம், வெந்தயம், பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப்பாகவோ, குழைவான சாதத்தோட பரிமாறலாம்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...