தேவையான பொருட்கள் :-
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4 – 6
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – 1 /2 கப்
கசகசா-1/2மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
அரைக்க : -
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 3பட்டை,
லவங்கம் – தலா 1
சோம்பு – 1/4 தேக்கரண்டி
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை : -
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
தக்காளி குருமா இட்லி, தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...