Loading...
Tuesday, 5 April 2016

சமையல் அறையை எளிதாக பராமரிக்க டிப்ஸ்..!!

வீட்டை பராமரிக்கும் அழகை வைத்தே ஒரு பெண்ணின் செயல்பாட்டையும், வீட்டின் தூய்மையையும் எடை போட்டு விடமுடியும். சில வீடுகளில் வரவேற்பு அறை மட்டும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும்.

ஆனால் சமையலறைக்குள் சென்றால் முகத்தை சுளிக்க வைக்கும். வீட்டை பராமரிப்பது பிரத்யேக கலை. ஒரு வீடு எப்படி எல்லாம் பராமரிக்கலாம் என்பது குறித்து டிப்ஸ்.

வீட்டின் அமைப்பு, பாதுகாப்பு, சவுகரியம், அலங்காரம் ஆகிய மற்ற சமாசாரங்கள் எல்லாம் அப்புறம்தான். இரு வேளையும் அடுப்புமேடையை (சிங்க் உட்பட) நன்றாக துடையுங்கள்.

தினம் தரையையும், வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்க்கை ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாத்திரங்களை உடனுக்குடன் கழுவிவைப்பது நல்லது. தினந்தோறும் சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.

குளியலறையில் ஆடை, துண்டு போடுவதற்கு ஆங்கர் இருப்பது போல் சமையலறையிலும் ஒரு கொக்கியை பொருத்துங்கள். அடுப்பு துடைக்க, கை துடைக்க தனித்தனி துணிகளை உபயோகியுங்கள்.

அவற்றை அவ்வப்போது அலசி உலர்த்துங்கள். முடிந்தவரை தேய்த்த பாத்திரங்களை துணி கொண்டு துடைத்து அடுக்குங்கள்.

இரும்பு வாணலி, தோசைக்கல், ஆகியவற்றை அவசியம் துடைத்து வைக்கவும். எக்காரணம் கொண்டு விரித்த தலையுடன் சமைக்க வேண்டாம். சோம்பல் படாமல், மாதம் ஒரு முறை கிச்சன் பல்பைக் கழட்டித் துடையுங்கள்.

எறும்பு பவுடர், கரப்பான் பூச்சி தொல்லையை தடுக்க மருந்து தெளிப்பது ஆகியவற்றை செய்து அதன் மீது பேப்பரை போட்டு வையுங்கள். இப்படி செய்வதால், மருந்துகளின் நெடி சமான்களில் ஏறாது. குழந்தைகளும் தொட வாய்ப்பில்லை.

சமையல் செய்யும்போது கண்டிப்பாக எக்சாஸ்ட் பேன் பயன்படுத்தவேண்டும். அடுப்பு உள்ள பகுதிக்கு மேல் அலமாரியில் இரும்பு பாத்திரங்களை கவிழ்ந்து வைத்துக்கொள்ளுங்கள். 

பருப்பு வகைகள் கொண்ட பிளாஸ்டிக் சாமான்களை வைக்காதீர்கள்.

பிசுக்கு ஏறும். இதுபோன்ற சின்ன, சின்ன விஷயங்களை உங்கள் சமையலறைக்கும் மேலும் மெருகூட்டும்.

இதுபோன்று உங்கள் வீட்டில் தொடர்ந்து ஸ்மார்ட் வர்க் செய்தால் நீங்களும் கிச்சன் கில்லாடிதான் ...

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP