தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 1
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
* அதனுடன் தனியாத்தூள், பொடித்த மிளகு சீரகம், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும்.
* இறக்கி வைத்து அதல் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
* நாட்டுகோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் போலவும் குடிக்கலாம்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...