தேவையான பொருள்கள் :
பச்சரிசி - 1 கப்
கருப்பு உளுந்து - 1 கப்
கருப்பட்டி - 1 கப்
நல்லெண்ணெய் - 1 குழம்பு கரண்டி அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை :
* அரிசி, உளுந்து இரண்டையும் நைசாக அரைத்து கொள்ளவும்.
* கருப்பட்டியை தூளாக்கி, அரை கப் தண்ணி விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைக்கவும்
* அகலமான சட்டியில் மாவை கொட்டி அதனுடன் கருப்பட்டி தண்ணீர் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் மேலும் 1கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டி விழாமல் நன்கு கைவிடாமல் கிளர வேண்டும்.
* தீயை மிதமாக வைத்து சிறிது சிறிதாக நல்லெண்ணெய் சேர்த்து அஞ்சு நிமிஷத்துக்கு கிளறவும்.
* மாவு திரண்டு அல்வா பதத்திற்கு வரும்போது இறக்கவும்.
* பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் முதுகு வலி வராது. எலும்புக்கு மிகவும் நல்லது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...