Loading...
Tuesday, 12 April 2016

முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு ...!!

தேவையான பொருள்கள் :

நறுக்கிய முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி (பெரியது) - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
பூண்டு - 3 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.

முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார்.சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP