தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளிப்பழம் – ஐந்து
புளி – ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் அரைத்தது – அரை கப்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வதங்கியதும் கனிந்த தக்காளிப் பழத்தை பிழிந்து விடவும். பின்னர் நன்றாக கிரேவியாகும் வரை வதக்கவேண்டும்.
* இந்த கலவையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் மசாலா வாடை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
* புளி கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்த உடன் ஸ்டவ்வை மிதமாக வைத்து மீனை போடவும். 5 நிமிடம் கழித்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும்.
* கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.
* இந்த குழம்பிற்கு கடைசியில்தான் மீனைப் போடவும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவையெனில் சேர்க்கவும். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளிப் பழம் சேர்த்தால் போதுமானது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...