தேவையான பொருட்கள் :
திணை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கைப்பிடி
மிளகு சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
காய்கறிக் கலவை – 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி )
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 இரண்டாக கீறவும்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:-
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
* திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
* சுவையான திணைஅரிசி காய்கறி உப்புமா ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...