தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 250 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – 2,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பாதாம், முந்திரி – தலா 50 கிராம்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பூண்டு – 10 பல்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்.
சோம்பு – அரை டீஸ்பூன்,
பட்டை – 2 துண்டு,
கிராம்பு, ஏலாக்காய் – தலா 2.
செய்முறை:
* அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். * அரைக்க கொடுத்துள்ளவற்றை பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அதனுடன், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நன்கு வதங்கியபின் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
* இதில் 2 கப் தண்ணீர் விட்டு கலந்து, தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
* வெந்ததும் பாதாம், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்து சேர்த்து இறக்கவும். ராய்தாவுடன் பரிமாறவும்.
* தேவைப்பட்டால் உங்களுக்கு விருப்பமான நட்ஸ் எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...