தேவையானவை:
துவரம் பருப்பு - 100
அகத்திக் கீரை - அரை கிண்ணம்
வெங்காயம்- 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
செய்முறை:
பருப்பை அலசி அத்துடன் பூண்டு,
தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், பாதி வெங்காயம் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து இறக்கி பருப்பை மசித்துக் கொள்ளவும்.
அகத்திக் கீரையை சிறிது தண்ணீரில் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும். மீதி உள்ள வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அவற்றுடன் பெருங்காயம், உப்பு, மிளகாய்த் தூள், வெந்த பருப்பைச் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு கிளறி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும், அத்துடன் வேக வைத்த அகத்திக் கீரையைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சத்தான அகத்திக் கீரை சாம்பார் தயார்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...