Loading...
Sunday, 8 May 2016

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி..

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்
கீரை (ஏதாவது ஒரு வகை) - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பற்கள் - 4
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

* சாதத்தை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

* கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். 

* பூண்டை நசுக்கி கொள்ளவும் அல்லது பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். 

* பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். 

* வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். 

* பின்னர் அதில் கீரையைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. கீரையிலுள்ள நீர்ச்சத்தே போதுமானது. 

* அடுப்பை சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விட்டு, கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி 3 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.

* சுவையான சத்தான கீரை சாதம் ரெடி.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP