தேவையான பொருள்கள் :
நன்கு பழுத்த தக்காளி - 3
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, தக்காளியை முழுதாகப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, தக்காளியை வெளியே எடுத்து ஆற விடவும். பின்னர் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சடி கொதிக்க ஆரம்பித்து, சற்று கெட்டியானவுடன், அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்ற நெய்யில் வறுத்து சேத்து, ஏலக்காய் தூளையும் தூவி கிளறி இறக்கி வைக்கவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...