Loading...
Sunday, 24 April 2016

அதிக நன்மைகளை அளிக்கும் தேன்..

* மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகள் தினந்தோறும் அருந்தினால் கால்சியம், மக்னீஷியம் அளவு அதிகமாகி நல்ல வலிவைத் தரும். பாலுடன் கலந்து கொடுத்தால் இரத்தத்தில் `ஹீமோகுளோபின்' அளவு அதிகமாகும்.

* தினமும் படுக்கைக்குப் போகும் முன்பு ஒரு தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குணமாகி விடும்.

* அரை எலுமிச்சை பழச்சாறும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் எல்லாவித அலர்ஜி வியாதிகளும் குணமடையும். இரைப்பை, குடல் புண்களை தேன் குணப்படுத்தும்.

* தேன் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் தசைகளில் வலி, கால்கள், பாதங்களில் பிடிப்பு, முதலியன தேனை அருந்துவதால் நீங்குகிறது.

* காலை இரவு தேனை 4 கரண்டி அருந்தி வந்தால் உடல் பருமண், வலிவு குறையாமல் இளைக்கும். தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும். தேன் கோழையை அகற்றும்.

தேன் குடிங்க! ஹெல்தியா இருங்க...!!

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP