Loading...
Thursday, 31 March 2016

டேஷ்டான இறால் பிரியாணி ..!!


தேவையானவை :-

சூரிய காந்தி எண்ணை - 300 கி
இறால் - 500 கி
அரிசி (சீராக சம்பா) - 500 கி
பல்லாரி வெங்காயம் - 250 கி
தக்காளி - 200 கி
இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 150 கி
புதினா - 100 கி
மிளகாய் - 4
எலுமிச்சை - 1
தயிர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலம் - கொஞ்சம்

எப்படி செய்வது :-

முதலில் இராலை தயிர் விட்டு உப்பு போட்டு கொஞ்சம் வத்தல் பொடி கலந்து பிசைந்து வைக்க வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அடுத்து பல்லாரி, மிளகாய் இவைகளை போட வேண்டும்.

நன்றாக இவற்றை வதக்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை அதில் கலந்து நன்கு சிவப்பு கலர் வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் தக்காளியை போட்டு வதக்கி, அதில் இறால் கலவையை சேர்த்து, மஞ்சள், வத்தல், கொத்தமல்லி பொடிகளை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் 1 டம்ளர் அரிசிக்கு (சீராக சம்பா) 2 டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து கொத்தமல்லி இழை, புதினா, உப்பு ஆகியவற்றை போட்டு மூடி வைக்க வேண்டும்.

சிறிது நேரத்திற்கு பின்னர் திறந்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் அதனை மூடி தம்பில் வைத்து இறக்க வேண்டும். சுவையான, சூடான இறால் பிரியாணியை அனைவருக்கும் பரிமாறலாம். இறால் பிரியாணி செய்ய 20 நிமிடங்கள் ஆகும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP