இதுவரை மட்டனைக் கொண்டு குழம்பு, குருமா, வறுவல், சுக்கா என்று செய்து சுவைத்திருக்கலாம். ஆனால் மட்டன் வடை செய்து சுவைத்ததுண்டா? ஆம், மட்டனைக் கொண்டும் வடை செய்யலாம்.
மேலும் மட்டன் வடையானது அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் ருசியாக இருக்கும். சரி, இப்போது அந்த மட்டன் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன் – 100 கிராம் மிளகு –
1 டீஸ்பூன் சீரகம் – 2 1/2
டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
மட்டன் நன்கு வெந்த பின்னர், மட்டனில் தண்ணீர் அதிகம் இருந்தால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு வெந்த மட்டனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததம், அரைத்து வைத்துள்ள மட்டனை வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி!!!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...