தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கறிவேப்பிலை
செய்முறை :
* வாழைக்காயை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
* வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிசம் செய்து வாழைக்காய் துருவியதைப் போட்டு உப்பு போட்டு வதக்கவும்.
* லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். துருவப்பட்டிருப்பதால் சீக்கிரம் அடிப்பிடிக்கவும் வாய்ப்பிருப்பதால் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வரவும்.
* பெருங்காயம் போட்டு நன்றாகக் கிளறி விடவும். புட்டு வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
* சுவையான வாழைக்காய் புட்டு ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...