தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
உதிர்த்த சோளம் – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
முந்திரி துண்டு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
* அதே எண்ணெயில் கடுகு, சீரகத்தை போட்டு தாளித்த பின் சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூடி வேகவிடவும்.
* 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.
* சுவையான சோளம் மசாலா ரைஸ் ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...