Loading...
Wednesday, 16 March 2016

தக்காளி பட்டாணி சாதம்.....!!

தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் – 1 கப்,
பச்சைப்பட்டாணி – அரை கப்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 4,
பச்சை மிளகாய் – 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 இணுக்கு,
கொத்தமல்லித் தழை – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.

செய்முறை:-

* தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக அரியவும்.

* பச்சை மிளகாயை இரண்டாக நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்புப் போட்டுச் சிவந்ததும் பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைப்பட்டாணி தக்காளியைப் போட்டு வதக்கவும்.

* வதங்கியதும் உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார்பொடி சேர்க்கவும்.

* நன்கு சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி ஆறவைத்து உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி வைக்கவும்.

* சுவையான தக்காளி பட்டாணி சாதம் ரெடி.

 

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP