Loading...
Saturday, 5 March 2016

தேங்காய்ப்பால் புளியோதரை செய்வது எப்படி என்று பார்போமா..

தேங்காய்ப்பால் புளியோதரை

என்னென்ன தேவை?

பச்சரிசி சாதம் - 1 கப், புளித் தண்ணீர் - 1/2 கப், தேங்காய்ப்பால் - 1/2 கப்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க...

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்
பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு- 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் - 10,
கறிவேப்பில்லை - ஒரு கொத்து.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, புளித் தண்ணீர், தேங்காய்ப்பால் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 8 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்கவிடவும்.

கெட்டியான பின் சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அரை மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும்.

வறுவலோடு சேர்த்து சாப்பிடலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP