Loading...
Tuesday, 1 March 2016

ருசியான தக்காளி குருமா செய்வது எப்படி...!!

ருசியான தக்காளி குருமா

தேவையான பொருட்கள் :

தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க :

தேங்காய் – 2 பத்தை
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
முந்திரி அல்லது பாதாம் – 10

தாளிக்க :

கடுகு, பெருஞ்சீரகம், மிளகு – தலா அரை ஸ்பூன்

செய்முறை :

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பாதியாக வதங்கியதும் அதில் தக்காளியை போட்டு சிறிது வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும்.

* கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான தக்காளி குருமா ரெடி.

* இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

 

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP