தாவரவியல் பெயர்: Ficus religiosa
கூரிய இலைகளையுடைய பெருமரம். எரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கொழுந்து வெப்பகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.
1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.
2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச்சூடு, சொறி, சிரங்கு, தினவு, நீர் எரிச்சல், ஆகியவை தீரும்.
3. மரப்பட்டைத் தூளைக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் புண், சொறிகளுக்குப் பூசக் குணமாகும்.
4. மரப்பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊறவைத்து வடிகட்டிக் குடிக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.
5. அரசு விதைத் தூள் உயிரணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டினை நீக்கும்.
6. அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியன தீரும்.
7. உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...