நண்டு மசாலா குழம்பு
தேவையானவை :-
நண்டு – 6
கடுகு – அரை தேக்கரண்டி
தேங்காய் – அரை மூடி
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – கொஞ்சம்
அரைப்பதற்கு மசாலா பொருட்கள்:
தேங்காய் – கால் மூடி
பெரிய வெங்காயம் – 3
இஞ்சி – ஒன்றரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் – 7
பூண்டு – 1
சீரகம் – ஒன்றரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கட்டு
புதினா – சிறிதளவு
செய்முறை
நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து சதைப் பகுதியை எடுத்துத் தயிருடன் கலக்கி வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். பிறகு அரைத்த மசாலாவை இதில் போட்டு, சிறிது நேரம் வதக்க வேண்டும். எலுமிச்சை ரசத்தைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
தயிருடன் உள்ள நண்டுக்கறியை இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்க்க வேண்டும். அரைமூடி தேங்காயைத் துருவி பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நண்டுக்கறி வெந்தவுடன் தேங்காய்ப்பாலை ஊற்றி லேசாக கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...