தேவையான பொருட்கள்:
சூடான சாதம் – 2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
வரமிளகாய் – 3
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 இணுக்கு
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
வெல்லம் – 1 துண்டு
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* சூடான சாதத்தில் மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலை, ½ டீஸ்பூன் உப்பு, 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாகக் கிளறி விடவும்.
* புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து உப்பைப் போட்டு வைக்கவும்.
* கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் போடவும்.
* பெருங்காயம் பொரிந்ததும் கறிவேப்பிலை, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி போட்டு கிளறி பின் மஞ்சள் பொடி போட்டு புளிச்சாறை ஊற்றவும்.
* அவ்வப்போது கிளறிவிடவும். நன்கு கொதித்து சுண்டியதும் எண்ணெய் பிரியும்போது பொடித்த வெல்லம் போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
* ஆறவைத்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு நன்கு கலந்து விட்டு வறுத்த வேர்க்கடலை பொரித்துப் போட்டு அலங்கரிக்கவும்.
* ஆந்திரா புளியோகரே ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...