தேவையான பொருட்கள்:
நீளமான கத்திரிக்காய் – 2 (நறுக்கியது) தேங்காய் – 1/2 கப் (துருவியது) எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 (நறுக்கியது) பூண்டு – 10 பற்கள் குழம்பு மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் மசாலா பொடிளை சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...