சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.
முகப்பரு நீங்க :
* புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும்.
* தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை சமமான அளவில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு குறையும்.
முகத்தில் கட்டிகள் குறைய :
* சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்
முகத்தில் கரும்புள்ளிகள் குறைய :
* கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.
* சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயத்தம் பருப்பு மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...