Loading...
Friday, 22 April 2016

சுவையான மொறு மொறுப்பான மசால் மெது வடை..!! 

தேவையான பொருட்கள் : -

கடலைப்பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/2கப்
கருவேப்பிலை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
புதினா - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கொத்தமல்லி தழை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

அரைக்க :-

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 1
சோம்பு - 1 / 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2

செய்முறை :

பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, ஒரு மேசைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பருப்பை கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனியாக கரகரப்பாக அரைத்து, அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்க்கவும்.இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, தனியாக எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.கைகளால் சிறு சிறு வடையாகத் தட்டி காயும் எண்ணையில் போட்டு, மிதமான சூட்டில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும். 

குறிப்பு :-

அரைத்து வைத்துள்ள பருப்புடன் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் வடை மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும்.வடை செய்வதற்கென தனியாக பருப்பு கிடைக்கும்.அதை வடை செய்வதற்கு பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

2 கருத்துகள்:

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP