தேவையான பொருட்கள்
வெந்தயம் – 500 கிராம்
பச்சரிசி மாவு – 200 கிராம்
வெல்லம் – 100 கிராம் (தூளாக்கவும்)
சுக்குதூள் – அரை தேக்கரண்டி ஏலக்காய் –2 (தூளாக்கவும்)
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
* வெந்தயத்தை வறுத்து தூளாக்குங்கள்.
* அரிசி மாவில், வெந்தயத்தூள், தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.
* பாத்திரத்தில் வெல்லத்தைக்கொட்டி நீர் கலந்து, பாகுஆக்கி வடிகட்டி எடுக்கவும்.
* கரைத்து வைத்துள்ள மாவை வாணலியில் கொட்டி நன்கு கிளற வேண்டும். வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகுவை கலந்து கிளறவேண்டும்.
மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். பச்சை தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.
* பின்பு அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள்.
* லேசான சூட்டில் சாப்பிடுங்கள்.
* இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும். அதனால் அவர்கள் மெலிந்துபோவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும்.
எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும். தலைமுடி உதிர்வது குறையும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...