தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரை கிலோ,
சின்ன வெங்காயம் – கால் கிலோ,
பூண்டு – 15 பல்,
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய்ப் பால் – 2 கப்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க:
சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக்குங்கள்.
* எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள்.
* இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள்.
* பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள்.
* இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள்.
* பெயர்தான் ‘சிம்பிளே’ தவிர, மிகவும் சுவையானது இந்த ஆலு மசாலா!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...