தேவையானவை :-
கடலை மாவு - 3 கப்,
பதப் படுத்திய பச்சரிசி மாவு - 1 1/2 கப்,
கறிவேப்பிலை பொரித்தது - சிறிது (அலங்கரிக்க),
சூடான எண்ணெய் - 4 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் தூள் அல்லது பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்றாகச் சலித்துக் கொள்ளவும். இத்துடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சூடான எண்ணெய் சேர்த்துக் கலந்து மூன்று பகுதிகளாக மாவை பிரித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை எண்ணெய் விட்டுக் காய வைக்கவும். ஒவ்வொரு பகுதி மாவையும் தனியாக எடுத்து, போதுமான தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்துக்கு மென்மையாகப் பிசையவும்.
இதனை காரா சேவு முறுக்கு அச்சில் நிரப்பி, காய்ந்த எண்ணெயில் நேரடியாகப் பிழிந்து, நன்கு வறுபட்டதும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வந்ததும் கரண்டியால் வடித்து எடுக்கவும். கறிவேப்பிலையால் அலங்கரிக்கவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.