என்னென்ன தேவை?
கேரட், பீன்ஸ்,
பச்சை பட்டாணி,
உருளைக் கிழங்கு – தலா 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
தயிர் – 3 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 4
ஏலக்காய் – 2
ஜாதிக்காய்த் தூள் – சிறிதளவு
வெங்காயம், தக்காளி – தலா 2
இஞ்சி பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
பாசுமதி அரிசி – 2 கப்
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியை பத்து நிமிடம் ஊறவையுங்கள். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதிக்காய் போட்டுப் பொரிந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.
அதில் இஞ்சி – பூண்டு போட்டு வதக்கி பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்குங்கள். பிறகு கொத்தமல்லி, புதினாவைச் சேர்த்து காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள்.
மிளகாய்த் தூள், தயிர் சேர்த்து நன்றாக வதக்கி, ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்துச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள்
நான்கு கப் தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து அதை அரிசி கலவையில் ஊற்றிக் கிளறி குக்கரை மூடிவிடுங்கள். சிறு தணலில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான பிரியாணி தயார்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.