தேவையான பொருள்கள்:
காளான் - கால் கிலோ
தேங்காய் - 1 கப்
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகு - 20 கிராம்
ஏலக்காய் - 6
பூண்டு - 12 பல்
கிராம்பு - தேவையான அளவு
பட்டை - தேவையான அளவு
மிளகாய் பொடி- 4 தேக்கரண்டி
கடுகு - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காளானை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகு, ஏலக்காய், பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.
* தேங்காயை அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதங்கியதும் காளானை போட்டு வதக்கி பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.
* பிறகு அரைத்து வைத்திருந்த மசாலாவை போட்டு வதக்கவும்.
* மசாலா வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறி தேங்காய் பாலை விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
* சுவையான மற்றும் ஆரோக்கியமான மஷ்ரூம் குழம்பு தயார்.
* இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், நூடுல்ஸ், பிரட் போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.