தேவையான பொருட்கள்
பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை – 2 கப்
பால் பவுடர் – 1 கப்
மைதா – 1 / 2 கப்
சமையல் சோடா – 1 / 2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
சர்க்கரை பாகு செய்வதற்கு
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய் – 2
செய்முறை
சர்க்கரை பாகு
மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.
ஜாமுன்
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
.
இதில் தேவையான அளவு பால் ஊற்றி லூசாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
உருண்டையை 18 – 20 பாகங்களாகப் பிரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடு செய்யவும்.
எண்ணெய் சூடானதும் அதில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.குலாப் ஜாமுன் மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.
பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும்.
குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே விட்டு விடவும்.பிறகு எடுத்து பரிமாறலாம்
What is maithama
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.