தேவையான பொருட்கள் :
இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – 2 சுளை.
எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 இணுக்கு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
* இளநீரை தனியாக எடுத்து வைக்கவும். அதில் உள்ள வழுக்கையையும் தனியாக வைக்கவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து அதில் தக்காளி, இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும்.
* அதில் மிளகாய், மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போடவும்.
* வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை கலவையை ஊற்றவும்.
* அதுசூடேறி வரும்போது இளநீரை ஊற்றிக் கொதி வரும் முன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* சுவையான சத்தான இளநீர் ரசம் ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.